தூங்கிக்கொண்டிருந்த தாயிடம் இருந்து 5 வயது குழந்தை கடத்தல்..! போலீசார் அதிரடி நடவடிக்கை..!

மும்பையில் உள்ள ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த தாயிடம் இருந்து 5 வயது குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் உள்ள குர்லா ரயில்வே நிலையத்தில் தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது குழந்தையை 24 வயது பெண்மணி கடத்தி சென்றுள்ளார். கடத்தப்பட்ட குழந்தையின் தாயான ஷப்னம் தைடே, சனிக்கிழமை கேட்டரிங் வேலைக்காக குர்லாவுக்குச் சென்றுள்ளார்.

திட்வாலாவில் உள்ள தனது வீட்டிற்குச் செல்லும் கடைசி ரயிலை தவறவிட்டதால், மறுநாள் இரயிலில் செல்ல முடிவு செய்து தன் மகனுடன் ரயில் நிலையத்தில் தூங்கினார். அவர் தூங்கிக்கொண்டிருக்கையில் 24 வயதான பெண் ஒருவர் அவரது 5 வயது ஆண் குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.

இதுகுறித்து ஷப்னம் குர்லா ரயில்வே போலீசிடம் புகார் கொடுத்த நிலையில் ரயில் நிலையத்தின்  சிசிடிவி கேமரா காட்சிகள் சரிபார்க்கபட்டு, குழந்தையை கடத்தியப் பெண் கைது செய்யப்பட்டார். அந்த பெண்ணை கோரேகானில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் கைது செய்தோம் என்று குர்லா அரசு ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment