கேரள விமான விபத்து : கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு! விபத்துக்கான காரணம் கண்டறிய வாய்ப்பு!

கேரளாவில் 2 ஆக உடைந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு.

துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருவதால் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்துள்ளார்.

அந்த சமயம் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தற்போது, விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.