நடுவானில் விமானத்தில் புகைபிடித்த கேரள நபர் கைது.!

நடுவானில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கழிவறைக்குள் புகைபிடித்த, 62 வயது கேரள நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த 62 வயது நபர், நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தின் உள்ளே கழிப்பறையில் புகை பிடித்துள்ளார். கொச்சியில் இருந்து சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் உள்ளே  புகைபிடித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அந்த நபர் மீது விமானச் சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விமானம் தரையிறங்கியவுடன் அந்த நபரை விமான நிலைய அதிகாரிகளிடம், பணியாளர்கள் ஒப்படைத்தனர், இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். போலீசார் கூறிய தகவலின்படி, சம்பந்தப்பட்ட நபர் திருச்சூரைச் சேர்ந்த சுகுமாரன் என்பது தெரியவந்தது, மேலும் அவர் மீது விமானச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

author avatar
Muthu Kumar

Leave a Comment