காஷ்மீர் விவகாரம் குறித்து நோட்டீஸ் ஒட்டியதாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக 30 மாணவ-மாணவியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சூட்டை கிளப்பி வந்த காஷ்மீர் விவகாரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் முற்றுப்புள்ளி வைத்தார்.அதாவது காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது என்றும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அமித் ஷா இந்த அறிவிப்பை அறிவித்த உடனே மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.கடும் எதிர்ப்புக்கு மத்தியில் காஷ்மீர் தொடர்பான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனையடுத்து மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.
ஆனால் இதற்கு ஆதரவும் , எதிர்ப்பும் ஒருசேர கிளம்பி வருகிறது.இந்த நிலையில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து நோட்டீஸ் ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடி என்ற பகுதியில் உள்ளது.இந்த பல்கலைக்கழகத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர்.குறிப்பாக ஆந்திரா,கர்நாடகா,ஜம்மு -காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து 30 மாணவ -மாணவியர்கள் நோட்டீஸ் ஒட்டியதாக புகார் எழுந்தது.இதனையடுத்து இந்த மாணவர்களிடம் விளக்கம் கேட்டு மத்திய பல்கலைக்கழக ஒழுக்க நெறி கண்காணிப்பாளர் ராஜகோபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…