காஷ்மீர் பிரிவினை என்பது சாத்தியமில்லை : ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத்..!

காஷ்மீர் பிரிவினை என்பது சாத்தியமில்லை என்றும் ராணுவ நடவடிக்கைகளில் குறுக்கிடுபவர்களை விட்டுவிட முடியாது என்றும் ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் பிரிவினையை விரும்புபவர்களுக்கு எதிராக ராணுவம் உறுதியுடன் போராடும் என்றும் இளைஞர்களால் தங்களை எதிர்த்துப் போராட முடியாது என்றும் கூறினார்.

சிரியா பாகிஸ்தானைப் போன்று அல்லாமல் இந்திய ராணுவத்தினர் முடிந்த வரை அப்பாவி மக்கள் பலியாவதை தவிர்க்க முயற்சிப்பதாகத் தெரிவித்த அவர், எதிர்ப்பைத் தெரிவிக்க ராணுவத்தினர் மீது கல்வீசுவது சரியான வழியல்ல என்று கூறினார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment