பிடிஎஸ்-ஐ பாக்க போறோம்! காணாமல் போன கரூர் மாணவிகள்..மீட்ட காவல்துறையினர்!

மிகவும் பிரபலமான கொரிய பாப் இசைக்குழுவான BTSக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லலாம். கொரிய நாட்டையும் தாண்டி அவர்களுக்கு தமிழில் ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக இருக்கிறது. இந்நிலையில், பிடிஎஸ் இசைக்குழு மீது அதிகம் ஆர்வம் கொண்ட மூன்று மாணவிகள் அதிர்ச்சிகரமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்கள்.

கரூரில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் மூன்று பேர் 14,000 எடுத்துக்கொண்டு பிடிஎஸ் இசைக்குழுவை பார்க்க கொரியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று பேரும் விடுதிரும்பவில்லை என்ற காரணத்தால் இவர்களுடைய பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

லட்சத்தீவில் புதிய விமான நிலையம் அமைக்க இந்தியா திட்டம்!

அவர்களுடைய புகாரின் அடிப்படையில் மூன்று மாணவிகளும்  காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே போலீசாரால் மீட்கப்பட்டனர். காவல்துறையினர் பேருந்து நிலையம், மற்றும் ரயில்வே நிலையங்களில் உள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது தான் மூன்று மாணவிகளும்  காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.  பிறகு அவர்களிடம் விசாரணை நடத்திய பின் தான் அவர் பிடிஎஸ் இசைக்குழு மீதான ஆர்வத்தால்,  அவர்களை பார்க்கவேண்டும் என செல்ல முயன்றது தெரிய வந்துள்ளது. பிடிஎஸ் இசைக்குழுவை பார்க்க கரூரில்  இருந்து கொரியாவுக்கு மூன்று மாணவிகள் செல்ல முயற்சி செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.