#KarnatakaElectionResults2023 சிம்லாவில் உள்ள ஜக்கு கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு.!!

கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும்நிலையில்,  காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி இன்று காலை சிம்லாவில் உள்ள கோவிலிலுக்கு சென்றுள்ளார். 

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் 10-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,  சிம்லாவில் உள்ள ஜக்கு கோவிலிலுக்கு சாமி வழிபாடு செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவர் பிரியங்கா காந்தி சென்றுள்ளார்.

இந்த கர்நாடகா தேர்தல் வெற்றிக்காக அவர் கோவிலில் வழிபாடு செய்துள்ளார். “நாடு மற்றும் கர்நாடகத்தின் அமைதி மற்றும் செழிப்புக்காக” பிரார்த்தனை செய்தார் என்று அவருடன் கோவிலுக்கு சென்ற காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி,  காங்கிரஸ் 110 இடங்களில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.