#JustNow: பெண் மருத்துவர் வன்கொடுமை – 4 பேர் மீது குண்டாஸ்

பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் மீது குண்டாஸ் சட்டம்.

வேலூரில் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள மணிகண்டன், சந்தோஷ், பார்த்திபன், பரத் ஆகிய 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூரில் மார்ச் 17-ஆம் தேதி ஷேர் ஆட்டோவில் சென்ற பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்