#JustNow: 100 நாள் வேலை திட்டத்தில் ரேஷன் கடை கட்ட நடவடிக்கை – அமைச்சர் ஐ.பெரியசாமி

ரேசன் கடைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப அதிவேகமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேரவையில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கூட்டுறவு நியாய விலைக் கடைகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எந்த மாவட்டத்தில் எங்கு கடைகள் திறக்கப்படாமல் இருக்கிறது என்று குறிப்பிட்டு தெரிவித்தால் உடனடியாக கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், ரேசன் கடைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப அதிவேகமாக துறைரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியின் மூலமாக கட்டப்பட்ட கூட்டுறவு நியாவிலைக்கடைகள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது என துணை சபாநாயகர் பிச்சாண்டி பேரவையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்