நீதி வென்றுவிட்டது.! உண்மை ஜெயித்து விட்டது.! – விஷால் நெகிழ்ச்சி பதிவு.!

விஷால் மீது லைக்கா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சக்ரா. இந்த படத்தை இயக்குனர் எம்.எஸ் ஆனந்தன் இயக்கி இருந்தார்.

இந்த திரைப்படத்தின் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக லைகா பட நிறுவனம் விஷால் மீது உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், விஷாலுக்கு எதிராக போடப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், பொய்யான வழக்கு போடப்பட்டதால், லைக்கா நிறுவனத்துக்கு 5 லட்சம் அபராதம் விதித்தும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனையடுத்து நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் “நீதி வென்றுள்ளது. உண்மை ஜெயித்துள்ளது” என தீர்ப்பை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.