கூட்டு பலாத்கார முயற்சி… பள்ளி மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுமி.!

ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள ஆனந்தபூர் எனும் ஊரை சேர்ந்த 15 வயது சிறுமி தனது சகோதரருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கலிங்காநகர் பகுதிக்கு உட்பட்ட துபுரி சாக்கில் கலிபானியில் உள்ள தங்கள் உறவினர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார்

அப்போது அதற்காக சிறுமி மற்றும் அவரது தம்பி பேருந்து ஸ்டாப்பில் இருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 5 நபர்கள், இப்பொது பஸ் வராது என கூறி, அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் இரவு தங்கிவிடுங்கள் என கூறியுள்ளனர்.

அதனை நம்பி அந்த சிறுமி மற்றும் சிறுமியின் தம்பி அங்கு தங்கியுள்ளனர். அந்த பள்ளிக்கூட கட்டிடத்தில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்ய முற்பட்டு உள்ளனர் அந்த 5 பேரும். உடனே அவர்களிடம் இருந்து தப்பித்து அந்த சிறுமி பள்ளிக்கூட மாடியில் இருந்து குதித்து விட்டார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்படவே, உடனே அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துவிட்டனர். இதில் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு உடனே, நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்ற செயலில் ஈடுபட்ட அந்த 5 போரையும் போலீசார் கைது செய்தனர்.

தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக கலிங்கநகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். அந்த சிறுமி மருத்துவ மனையில் சிகிச்சையில் இருக்கிறார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment