Categories: சினிமா

ஜோ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியீடு?

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இயக்குனர் ஹரிஹரன் ராம் என்பவருடைய இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜோ. இந்த  படத்தில் ரியோ ராஜிற்கு ஜோடியாக மாளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 7 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. படம் வெளியான சமயத்தில் இருந்தே மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.

எதிர்பார்ப்புடன் வரும் பொங்கல் திரைப்படங்கள் !!

படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது எனவும் படம் டிசம்பர் 22-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் கடந்த ஆண்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அறிவித்தது போல படம் வெளியாகவில்லை.

ஏனென்றால், நாட்கள் கடக்க கடக்க படத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜோ திரைப்படம் வரும் ஜனவரி 15-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

மீண்டும் ரூ.55,000- ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு.!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…

9 mins ago

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை ! ஒப்பு கொண்ட மும்பை கேப்டன் !

சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…

43 mins ago

திருமணத்திற்காக ஷாப்பிங் சென்ற போது பயங்கர விபத்து.. 6 வயது சிறுவன் உள்பட 5 பலி.!

சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…

52 mins ago

ரூ.5 லஞ்சம் வாங்கிய கம்பியூட்டர் ஆபரேட்டர்.! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி  ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…

60 mins ago

கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன.? ஆம் ஆத்மி விளக்கமும்.. ஸ்வாதி மாலிவால் பதிலும்…

சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…

1 hour ago

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

2 hours ago