ஜார்கண்ட் : ரயில் தண்டவாளத்துக்கு வெடிவைத்த நக்சலைட்டுகள்.!

நேற்று (வியாழக்கிழமை) மும்பை – ஹவுரா இடையேயான ரயில்வே வழித்தடத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் மனோகர்பூர் மற்றும் கோயில்கேரா இடையே உள்ள ரயில் பாதையின் ஒரு பகுதியானது மர்ம நபர்களால் வெடி வைத்து சேதப்படுத்தப்பட்டது.

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல்… மத்திய அரசு புதிய முடிவு.!

இந்த நாச வேலையை செய்தது நக்சலைட்டுகள் என விசாரணையில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது கோயில்கேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது.ரயில் தண்டவாளம் சேதம் காரணமாக ஹவுரா-மும்பை வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது தண்டவாளம் சரிசெய்யப்பட்டு வருவதாகவும், சீரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும், விரைவில் ரயில் சேவை மனோகர்பூர் மற்றும் கோயில்கேரா நடைபெறும் எனவும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.