வங்கக்கடலில் உருவான ஜாவத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
வங்ககடலில் உருவான ஜாவத் புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வலுவிழந்த ஜாவத் புயல் விசாகப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 180 கிமீ தொலைவில் கோபால்பூருக்கு தெற்கே 260 கிமீ தொலைவில் (ஒடிசா , பூரியில் இருந்து 330 கிமீ தென்-தென்மேற்கில்) உள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி நாளை ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
The Cyclonic Storm ‘JAWAD’ weakened into a Deep Depression at 1730 hrs IST of today, it is about 180 km east-southeast of Vishakhapatnam (Andhra Pradesh), 260 km south of Gopalpur (Odisha , 330 km south-southwest of Puri (Odisha) and 420 km south-southwest of Paradip (Odisha).
— India Meteorological Department (@Indiametdept) December 4, 2021