27 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி.!

தஞ்சை அருகே மானோஜிபட்டியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 800 காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்த இந்தப் போட்டியில் காளைகளை அடக்குவதற்காக 357 வீரர்கள் களத்தில் குதித்தனர். காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு குளிர்சாதன பெட்டி, பீரோ, சைக்கிள், தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதேபோல் அரியலூர் மாவட்டம் திருமானூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்