சிறை அலுவலர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி எரிப்பு – இருவர் கைது

சிறை அலுவலர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்த விவகாரத்தில் இருவர் கைது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, கடலூர் மத்திய சிறை அருகே உள்ள உதவி ஜெயிலர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, அவரது குடும்பத்தினரை உயிருடன் எரித்து கொல்ல மர்ம நபர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

உதவி ஜெயிலர் மணிகண்டன் குடியிருக்கும் காவலர் குடியிருப்புக்கு வந்த மர்ம நபர்கள் சிலர், அவர் வீட்டின் சமையல் அறையின் ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். அறை முழுவதும் தீ பற்றி எறிந்த நிலையில், இந்த நேரத்தில் உதவி சிறை அலுவலர் மணிகண்டனின் குடும்பத்தினர் வேறு ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்ததால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, தினேஷ் மற்றும் செந்தில் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment