அது கரப்பான்பூச்சி இல்ல.. வெங்காயம் துண்டு.! சண்டிகர் உணவகத்தின் அட்ராசிட்டி…

சண்டிகரில் உள்ள பிரபல மாலில் உள்ள ஒரு உணவகத்தில் வாங்கப்பட்ட ஃபிரைடு ரைஸில் கறைபனிப்பூச்சியை பார்த்து ஊழியர்களது வெங்காய துண்டு என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஹோட்டல்களில் அவ்வப்போது இந்த புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு சில உணவகங்களில் தவறுதலாக ஏதேனும் வேண்டாத பொருட்கள், சாப்பிடக்கூடாத சில பொருட்கள் உள்ளே வந்து விடுகின்றன.

அந்த விஷயங்கள் புகார், மூலமாகவோ, இணையதள வைரல் வீடியோ மூலமாகவோ பொது வெளிச்சத்திற்கு வந்த பிறகு அந்த உணவகம் அதனை ஏற்றுக்கொண்டு , அந்த தவறு திரும்ப வராமல் பார்த்துக்கொள்கிறது.

ஆனால், சண்டிகரில் உள்ள நெக்ஸஸ் எலண்டே மாலில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து ஒரு நபர் ஃபிரைடு ரைஸ் வாங்கியுள்ளார். அதில், ஒரு கரப்பான் பூச்சி இருப்பதை வாடிக்கையாளர் கண்டார்.

உடனே அது குறித்து, உணவக ஊழியர்களிடம் சுட்டி காட்டினார். ​​​​ஆனால் உணவக ஊழியர்கள் அதனை வெங்காய துண்டு என்று கூறியுள்ளாராம். இதனால் கோபமடைந்த வாடிக்கையாளர்,  காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment