12ம் வகுப்பு மாணவர்களுக்கு இது கட்டாயம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.!

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘EMail ID’ தொடங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

12ம் வகுப்பு முடித்து கல்லூரி மாணவர் சேர்க்கையின் போதும், ‘நான் முதல்வன்’ திட்டத்தை அமல்படுத்தும் போதும் மின் அஞ்சல் முகவரி Mail ID கட்டாயம் தேவைப்படுவதால், உடனே மின் அஞ்சல் முகவரி (Mail ID) உருவாக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஜூலை 30க்குள் மாணவர்கள் மின் அஞ்சல் முகவரை தொடங்க தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உதவுமாறும், அதனை பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.