ஆஸ்கர் அட்டகாசங்கள்..! வெற்றி பெற்றால் மட்டுமல்ல போட்டியிட்டாலே கோடி கணக்கில் பரிசு மழை.!

ஆஸ்கர் இறுதி பட்டியலில் தேர்வான கலைஞர்களுக்கும் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கபட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி காலை 5 மணி அளவில் தொடங்கி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் வெற்றிபெற்றர்வர்கள் கம்பீரமாக தங்கள் விருதுகளுடன் வீட்டுக்கு செல்கின்றனர்.

அனைவருக்கும் பரிசு :

ஆனால், இறுதிபட்டியல் வரை போராடி, விருது கிடைக்காமல் இருப்பவர்கள் வெறும் கையுடன் போக கூடாது என ஆஸ்கர் கமிட்டி இறுதி பட்டியலில் தேர்வானவர்களுக்கு பரிசுகளை அளித்துள்ளது.

1 கோடி ரூபாய் பரிசு : 

‘எல்லோரும் வெற்றி பெறுகிறார்கள்’ என்ற வகையில் பரிசுபை இந்த ஆண்டு சுமார் 1,26,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 1 கோடி ரூபாய்) மதிப்புடைய பொருட்களை அந்த பரிசு பைகளுக்குள் வைத்துள்ளது என கூறப்படுகிறது. இது கனடா நாட்டுக்கு சுற்றுலா பேக்கேஜ், இத்தாலிய கலங்கரை விளக்கத்தில் தங்குவது, ஆஸ்திரேலியாவில் சொந்த நிலம் மற்றும் சிறப்பு அழகு அறுவை சிகிச்சை கூப்பன்கள் என பல்வேறு பரிசுகள் இதில் அடங்கும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment