#ISL கால்பந்து : சென்னை அணிக்கு பதிலடி கொடுத்தது பெங்களூரு அணி..!

ஐஎஸ்எல் (ISL)2023 -2024 கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு  7.30 மணிக்கு நடந்த போட்டியில் சென்னையின் எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதின. இப்போட்டியானது பெங்களுரு ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில்  நடைபெற்றது.

French Cup : அபார வெற்றியால் காலிறுதிக்குள் அதிரடியாக நுழைந்தது பிஎஸ்ஜி ..!

இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின் தங்கியுள்ள நிலையில் இப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கின. இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் கடந்த டிசம்பர் 13-ம் தேதி நடைபெற்ற போட்டியில் மோதி கொண்டன. அதில் சென்னையின் எப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை தோற்கடித்திருந்தது.  அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் பெங்களூரு அணி களமிறங்கியது.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டத்தின் பகுதி நேர முடிவில் இரு அணிகளும் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

ஆட்டத்தின் இரண்டாம் பாதி தொடங்கியபோது பெங்களூரு வீரர் ரியான் வில்லியம்ஸ் ஆட்டத்தின் 62 வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தி பெங்களூரு அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார். அதன் பிறகு அந்த கோலை சமன் செய்ய சென்னை அணி போராடியது, இருப்பினும் கோல் அடிக்க முடியாமல் திணறியது.

இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கணக்கில் பெங்களூரு அணி, சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் காரணமாக புள்ளி பட்டியலில் அந்த அணி தற்போது 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment