#ViralVideo:”உன் பெயர் முகமதுவா?”-மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை அடித்தே கொன்ற பாஜக நிர்வாகி?..!

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் இசுலாமியர் என நினைத்து ஜெயின் மதத்தை சேர்ந்த முதியவர் ஒருவரை பாஜக நிர்வாகி கடுமையாக தாக்கியதில் முதியவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தின் சிர்சா கிராமத்தில் வசிக்கும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பவர்லால் ஜெயின் என்ற 65 வயது முதியவர்,ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மதம் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது குடும்பதாருடன் சென்றிந்த நிலையில்,வழி தவறி காணாமல் போய்விட்டார்.இதனையடுத்து,அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதனையடுத்து,இரு தினங்களுக்கு பிறகு நீமுச் மாவட்டத்தில் உள்ள ராம்புரா சாலையில் (மானசா காவல்துறையிலிருந்து ஒரு கிமீ தொலைவில்) முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து,இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே,பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் தினேஷ்,முதியவர் ஜெயினை கடுமையாக தாக்கி அவரது ஆதார் அட்டையைக் கேட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.அந்த வீடியோவில்,முதியவரை பார்த்து நீ ஒரு முஸ்லிமா?,உன் பெயர் முகமதுவா? ,ஆதார் அட்டை எங்கே? என்று கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து,IPC பிரிவுகள் 304 மற்றும் 302 (கொலை) ஆகியவற்றின் கீழ் பாஜக பிரமுகர் தினேஷ் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.மேலும்,வீடியோவை ஆய்வு செய்து வருவதாகவும்,இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை வைத்து வீடியோ எடுத்தவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சம்பவத்திற்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட தினேஷ் குஷ்வாஹா தலைமறைவாகிவிட்டார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைமையிலான மாநில அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில்,காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜிது பட்வாரி கூறுகையில், “மத்திய பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை,ஆதார் அட்டையை காட்டவில்லை என்பதற்காக ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.ம.பி.யில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.இதற்கு உள்துறை அமைச்சர் உரிய பதில் அளிக்க வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

15 வயது சிறுவன் கொலையாளி என தீர்ப்பு ..! சக மாணவரை இதயத்தில் குத்தி கொன்ற கொடூரம் !!

Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…

3 mins ago

அவதூறு வழக்கு… கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் வாகனம் விபத்தில் சிக்கியது.!

Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…

16 mins ago

ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கேஜிஎஃப் விக்கி கைது.!

KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள்…

16 mins ago

நெல்லை காங். தலைவரை 2 நாட்களாக காணவில்லை – மகன் காவல்நிலையத்தில் புகார்

KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…

43 mins ago

இந்திய பகுதிகளுடன் நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டு.! வெடித்த புதிய சர்ச்சை…

Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…

1 hour ago

‘எதுவுமே உருப்படியா அமையல’ ! தோல்விக்கு பின் புலம்பும் ஹர்திக் பாண்டியா !!

Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…

1 hour ago