காரணமே இல்லாம பயங்கர சண்டை வரும்! விஜயகாந்த் குறித்து மனம் திறந்த வாகை சந்திரசேகர்?

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் அவருடன் படங்களில் பணிபுரிந்த சக நடிகர்கள் அவர் செய்யும் நல்ல விஷயங்களை கண்ணால் பார்த்திருப்பார்கள். அதனை பேட்டிகளில் வெளிப்படையாக கூறி அவரை பற்றி பாராட்டி பேசுவதும் உண்டு. அப்படி தான் விஜயகாந்துடன் பல படங்களில் பணியாற்றிய நடிகர் வாகை சந்திரசேகர் பேட்டி ஒன்றில் விஜயகாந்த் பற்றி உருகி பேசியுள்ளார்.

READ MORE – ஜப்பான் பட தோல்விக்கு கார்த்தி தான் காரணம்… பிக் பாஸ் பாவா ஓபன் டாக்.!

பேட்டியில் பேசிய நடிகர் வாகை சந்திரசேகர் ” விஜயகாந்த் மாதிரி ஒரு நல்ல மனிதரை யாருமே பார்க்க முடியாது. அவருடன் எனக்கு பல நினைவுகள் இருக்கிறது. நான், விஜயகாந்த், ராதா ரவி என அனைவருமே நெருங்கிய நண்பர்கள். நண்பர்கள் என்றால் பாசமாக பேசிக்கொள்வோம் என அப்படியெல்லாம் இல்லை அடிக்கடி எங்களுக்குள் சண்டை அதிகமாக வரும். விஜயகாந்த் ஒரு முடிவு எடுத்து இது தான் சரி என்று சொல்வார்.

READ MORE – ப்ரோ நமக்கு செட் ஆகாது! சூர்யாவின் ஹிட் பட வாய்ப்பை நிகாரித்த விஜய்?

மற்றோரு பக்கம் ராதா ரவி என்னுடைய முடிவு தான் சரி என்று கூறுவார். மற்றோரு பக்கம் நான் என்னுடைய முடிவு சரி என்று கூறுவேன். இதனாலே எங்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வரும் சில நாட்கள் பேசிக்கொள்ளமாட்டோம். அதனை போலவே, ஒரு சில சமயங்களில் எல்லாம் காரணமே இல்லாமல் சண்டைபோட்டுக்கொள்வோம் அழுவோம். இப்படி செய்த காரணத்தால் எங்களை சினிமாவை விட்டு ஒதுக்கி வைத்து இருந்தார்கள்.

read more- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்?

அந்த அளவிற்கு நாங்கள் எல்லாம் கலாட்டா செய்துகொண்டு ஜாலியாக இருப்போம். விஜயகாந்த்க்கு நெருக்கமான நண்பர்களில் நானும் ஒருவன். அவர் தன்னுடைய பிரச்சனைகளை மட்டும் தனியாக பார்க்கமாட்டார். மற்றவர்களின் பிரச்சனையும் எடுத்து அதுவும் தன் பிரச்சனை என்பது போல தான் பார்ப்பார். பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பவர்களை தேடி தேடி தன்னுடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார்.

READ MORE – ப்ரோ நமக்கு செட் ஆகாது! சூர்யாவின் ஹிட் பட வாய்ப்பை நிகாரித்த விஜய்?

அந்த மாதிரி நல்ல குணம் அவருக்கு மட்டும் தான் இருக்கும். சிறந்த நடிகர் மட்டுமில்லை அவர் ஒரு நல்ல மனிதர்” எனவும் வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும் விஜயகாந்தும் நடிகர் வகை சந்திரசேகரும் சிவப்பு மல்லி, பேரரசு, ஊமை விழிகள், நரசிம்மா உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.