நிரந்தர நோயாக மாறுகிறதா கொரோனா….? ஆராய்ச்சியாளர்களின் கருத்து என்ன…?

கொரோனா பெருந்தொற்று என்ற நிலையில், நிரந்தர நோயாக மாறும். ஆனாலும், மக்கள் விழிப்புடன் செயல்பட்டால், அச்சப்பட தேவையில்லை.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை அழிக்க முடியவில்லை என்றாலும், இதனை தடுப்பதற்கான பல்வேறு  நடவடிக்கைகளை ஒவ்வொரு நாட்டு அரசும் மேற்கொண்டு வருகிறது. தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், இந்த வைரஸ் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்க நோய் கட்டுப்பாடு தடுப்பு மைய (CDP) ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி, தற்போது pandamic (பெருந்தொற்று)-ஆக இருக்கும் இந்த வைரஸ் Endemic- ஆக மாறும் என கூறுகின்றனர். Endemic என்பது, அழிக்கவே முடியாமல், வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே தொடர்ந்தால் அது Endemic என்று அழைக்கப்படுகிறது.

 இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும், மீண்டும் குறிப்பிட்ட நாடுகளில் தோன்றும் என கூறப்படுகிறது. அதாவது, இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதுமே பரவி விட்டது. இதனை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். முழுவதும் அழிக்க முடியாது. ஏனென்றால், உலகம் முழுவதும் 100% மக்களுக்கு தடுப்பூசி கொடுக்க வேண்டும். அது சாத்தியமில்லாத ஒன்று. மேலும், இந்த வைரஸ் உருமாறி கொண்டே  இருப்பதால், இதனை அழிக்க முடியாது.

தடுப்பூசியை பொறுத்தவரையில், ஒருவர் அதை போட்டுக் கொண்டால், அதன் செயல்திறன் குறிப்பிட்ட காலங்களுக்கு தான் இருக்கும். 2 வருடங்களுக்கு பின் மறுபடியும் இந்த தொற்று பரவும் போது, தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று ஏற்படும் என கூறுகின்றனர். சில நாடுகளில்  கொரோனா இல்லை, எனவே யாரும் மாஸ்க் அணிய வேண்டாம். அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது என்றாலும், வெளி நாட்டில் வந்த ஒவருக்கு கொரோனா தொற்று இருந்தால்,  மீண்டும், மீண்டும் இந்த தொற்று பரவலாம்.

இதற்கு முடிவு என்னவென்றால், கொரோனாவோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும். கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை என்று இல்லாமல், நமது நாட்டில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா பரவலாம் என்ற அவசர நிலையோடு அரசுகள் செயல்பட வேண்டும். எப்போதுமே, மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன், மருத்துவ படுக்கைகள் பற்றாகுறை இல்லாமல், எப்போதுமே தயாராக இருக்க வேண்டும். தடுப்பூசிகள் எப்போதுமே போடப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எனவே, கொரோனா பெருந்தொற்று என்ற நிலையில் இருந்து, நிரந்தர நோயாக மாறும். ஆனாலும், மக்கள் விழிப்புடன் செயல்பட்டால், அச்சப்பட தேவையில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.