'இருட்டு அறையில் முரட்டு குத்து -2' வருகிறது ! ரசிகர்கள் உற்சாகம் !

2018ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்த படத்தில் வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷா ரா, கருணாகரன், மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், மதுமிதா ஆகியோர் முக்கிய கதாாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடிப் படமாகும். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் இப்படத்தில் புதுமுக நடிகர்களால் எடுக்கப்படும் மற்றும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறவிப்புகள் தீபாவளிக்கு பிறகு வெளிவரும் என்றார். இந்த இரண்டாம் பாகம் 2020 கோடை விடுமுறை அன்று வெளிவரும் என்றும் கூறினார்.

author avatar
Vidhusan