ரூ.22.28 கோடி சொத்துகள் முடக்கம் !புதிய செய்தி அல்ல, 6 மாதங்களுக்கு முன்பே பிறப்பித்த உத்தரவு!கார்த்தி சிதம்பரம் தரப்பு விளக்கம்

எனது சொத்துகள் முடக்கப்பட்டது புதிய செய்தி அல்ல என்று கார்த்தி சிதம்பரம் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று பெற்றுத் தருவதாக சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

அதேபோல் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில்  காங்கிரஸ் சார்பில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.

நேற்று  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான  ரூ.22.28 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை.அதாவது வழக்கில் தொடர்புடைய 3 நிறுவனங்களில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில்  கார்த்தி சிதம்பரம் போட்டியிடும் நிலையில் அமலாக்கத்துறை அவரது சொத்துக்களை முடக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் இன்று கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அருண் நடராஜன் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில்,கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கப்பட்டது புதிய செய்தி அல்ல என்றும்  6 மாதங்களுக்கு முன்பே பிறப்பித்த உத்தரவு என்று கூறியுள்ளார்.மேலும் அமலாக்கத்துறை பழைய உத்தரவை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

இன்று தன்னம்பிக்கை நாயகன் அஜித்குமாரின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்!

HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…

2 mins ago

ஐபிஎல் தொடரின் மற்றொரு மிகப்பெரிய போட்டி !! சென்னை – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…

3 hours ago

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

10 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

15 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

16 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

16 hours ago