பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி உயிரிழப்பு நிகழா வண்ணம் பணிபுரிய மின்சார பணியாளர்கள் அறிவுறுத்தல்..!

மின் விபத்துகள் மற்றும் கள பணியாளர்கள் உயிரிழப்பு அதிகளவில் ஏறபடுவதால் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி உயிரிழப்பு நிகழா வண்ணம் பணிபுரிய அறிவுறுத்தல். 

மின் பகிர்மான கழக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக மின் விபத்துக்கள் அதிகம் நடைபெறுவதாக தெரியவருகிறது. இதனால் கள பிரிவுகளில் பணிபுரியும் கள பணியாளர்கள் உயிரிழப்பு மற்றும் உடல் நல பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. நிறுவனம் சாரா மின் நுகர்வோர்களும் உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்காததால் மின் விபத்து, உயிரிழப்பு முதல் தீவிர உடல் பாதிப்பு அதிகளவில் நடைபெறுகிறது.

எனவே, இனி வரும் காலங்களில் மிக கவனத்துடனும், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தி மின் விபத்துக்கள் நிகழாவண்ணமும் கள பணியாளர்கள் மற்றும் வாரியத்திற்கு எவ்வித பாதிப்பும் இன்றி வாரிய பணி மேலும் சிறப்பாக நடைபெற தங்கள் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றும்மாறு அறிவுறுத்தி, மேலும் இதுகுறித்து பொது மக்கள் கவனத்திற்கு மின் உபகரணங்கள் மற்றும் மின்சாரம் பயன்பாடு பாதுகாப்பாக கையாள்வது குறித்து கையேடுகள், ஊடக அளவில் விளம்பரம், பொது இடங்களில் பாதுகாப்பு விளம்பர அறிக்கைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தலைமை பொறியாளர் / மேற்பார்வை பொறியாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்படுகிறது.

author avatar
murugan