ட்ரோன் மூலம் செடிகளுக்கு பூச்சிமருந்து தெளிப்பு!! வரவேற்த்த விவசாயிகள்

ட்ரோன் மூலம் பூச்சி மருந்து அடிக்கும் சேவையை சேலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இதனை மேற்கொண்டு, அதனில் வெற்றி பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான பவானிசாகர், கொத்தமங்கலம், சிக்கரசம்பாளையம், தாண்டாம்பாளையம், பகுத்தம்பாளையம், இக்கரைதத்தப்பள்ளி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரபள்ளவில் மல்லிகை பயிரிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், சேலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினர் பறக்கும் ‘ட்ரோன்’ இயந்திரத்தை பயன்படுதினர். மனிதர்களால் ஒரு நாளைக்கு 2 முதல் 3 ஏக்கர் வரை மட்டுமே மருந்து தெளிக்கமுடியும். அனால், இந்த வகையான ட்ரோன்கல் மூலம் ஒரு நாளைக்கு 40 ஏக்கர் வரை மருந்துகள் தெளிக்க முடியும்.

இதனை சத்தியமங்கலம் விவசாயிகள் பெரிதளவில் வரவேற்த்தனர்.