INDvsSL T20SERIES: சூர்யகுமார் அதிரடி சதம்! இந்திய அணி 228 ரன்கள் குவிப்பு.!

இலங்கைக்கு எதிரான டி-20 யில், சூர்யகுமாரின் அதிரடி சதத்தால், இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று, ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்திருந்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் முதல் ஒவரிலேயே இஷான் கிஷன் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு களமிறங்கிய ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 5 போர்கள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் மற்றும் ஷுப்மன் கில் ஜோடி 1அதிரடியாக விளையாடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னெர்ஷிப் சேர்த்த நிலையில், கில் 46 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

சூர்யகுமார் யாதவ், நிலைத்து நின்று விளையாடி அணியின் ஸ்கோரை 200 ரன்களைக் கடக்க உதவினார். முடிவில் சூர்யகுமார் யாதவ், 45 பந்துகளில் தனது மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்துள்ளது.

அதிகபட்சமாக சூர்யகுமார் ஆட்டமிழக்காமல் 112* ரன்கள் குவித்தார்.  இலங்கை அணி சார்பில், மதுஷங்கா 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment