Cricket Breaking : 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.டாஸ் வென்ற இந்திய அணி பேட் செய்ய முடிவு செய்தது.

இந்திய அணி :

இதனைத்தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே எல் ராகுல்(9) மற்றும் ரோஹித் ஷர்மா(15) தொடக்கத்தில் நிதானமாக விளையாடினாலும் லுங்கி என்கிடி பந்து வீச்சில் ஒரே ஓவரில் ஆட்டமிழக்க  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 12 ரன்களுக்கு லுங்கியிடம் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தார்.

மறுபுறம் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 68 ரன்கள் எடுத்தது அணியின் ரன்னை உயர்த்த அதன் பின்னர் வந்த யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்தது .

தென்னாப்பிரிக்கா பந்து வீச்சாளர்களில் லுங்கி என்கிடி 4, பார்னெல் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்கா அணி :

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 3 ரன்கள் எடுத்தபோது குயின்டன் டி காக், ரிலீ ரோசோவ் ஆகியோரின் விக்கெட்களை இழக்க 3 வது விக்கெட்டாக தேம்பா பாவுமா ஆட்டமிழந்தார்.

அதிரடியாக விளையாடிய ஐடன் மார்க்ராம் 52 ரன்கள் எடுத்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சற்று சிரமத்தை கொடுத்து ஆட்டமிழக்க,மறுபுறம் ஆடிய டேவிட் மில்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல்  59 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இறுதியாக தென்னாப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் வித்தியாசத்தில்  இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment