டோக்கியோ ஒலிம்பிக்:பதக்கத்தை உறுதிசெய்தார் லவ்லினா…!

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதி போட்டியில் வெற்றி பெற்று, இந்தியாவின் லவ்லினா பதக்கத்தை உறுதி செய்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை காலிறுதி போட்டியில்,64-69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா,சீன தைபேயின் சின்-சென் நியென்னை எதிர்கொண்டார்.

இப்போட்டியில்,சீன வீராங்கனையை 4-1 என்ற கணக்கில் லவ்லினா தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.இதனால்,ஏதேனும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.