இந்தியாவின் அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி….!

அக்னி ரக ஏவுகணைகளின் புதிய வகையான அக்னி பி ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

புதிய ரக அக்னி ஏவுகணையான அக்னி பி அல்லது அக்னி பிரைம் ஏவுகணை சோதனையை இந்தியா ஒடிசாவின் கடற்கரை பகுதியில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை தளத்தில் வைத்து டிஆர்டிஓ மூலம் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

இந்த ஏவுகணை முழுவதும் காம்போசைட் மெடீரியல் மூலமாக உருவாக்கப்பட்டது. திட்டமிட்டபடியே இந்த ஏவுகணை மிக துல்லியமாக எந்த பிரச்சனையும் இன்றி விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு அமைப்பான டிஆர்ஒ கூறியுள்ளது.

author avatar
Rebekal