நம்பர் 1 செஸ் வீரரை வென்ற இந்தியாவின் 19 வயது கிராண்ட் மாஸ்டர்.!

இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகாசி, உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்துள்ளார்.

இந்தியாவின் 19 வயது கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகாசி, எய்ம்செஸ் ரேப்பிட் தொடரின் 7ஆவது சுற்று போட்டியில், உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்துள்ளார். அர்ஜுன் எரிகாசி, தற்போது இந்த செஸ் தொடரின் புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அர்ஜுன் எரிகாசி தனது செஸ் விளையாட்டு வரலாற்றில் முதன்முறையாக கார்ல்சனை  வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Muthu Kumar

Leave a Comment