சமுத்திர சேது திட்டத்தின் கீழ் ஈரான் நாட்டிலிருந்த இந்தியர்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வருகை!

சமுத்திர சேது திட்டத்தின் கீழ் ஈரான் நாட்டிலிருந்த இந்தியர்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தனர்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை காட்டி வருகிறது. இந்த வைரஸ் பரவலால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் வெளி நாடுகளில் உள்ளவர்கள் மீண்டும் தங்களது சொந்த நாட்டிற்கு வர இயலாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பல நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை கொண்டுவரும் சமுத்திர சேது திட்டத்தின் கீழ் ஈரான் நாட்டிலிருந்த இந்தியர்களை அழைத்து வந்த கடற்படை கப்பல் இன்று தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.