மகளிருக்கான டி20 உலககோப்பை போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இப்போட்டி சவுத் ஆப்ரிக்காவில் கேப் டவுனிலுள்ள நியூலாண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தது.பாகிஸ்தான் அணியில் மிராஃப் அதிகபட்சமாக 68 ரன்களை எடுத்தார்.
150 வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.