செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட இந்திய வீராங்கனை வைஷாலி தேர்வு.!

இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டரும், 2023 உலக கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த ஆர்.பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரியான வைஷாலி, செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி பிரிட்டனில் உள்ள ஐல் ஆஃப் மேன் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டி அக்டோபர் 23ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை நடைபெறும். இது உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச்சுற்றின் ஒரு பகுதியாகும். சுவிஸ் பிரிவின் கீழ் 11 சுற்றுகள் விளையாடப்படும். இதில் அனைத்து கண்டங்களில் இருந்தும் 164 வீரர்கள் பங்கேற்கின்றனர். கிராண்ட் ஸ்விஸ்ஸில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், 2024 பெண்கள் கேண்டிடேட் தொடருக்குத் தேர்வு பெறுவார்கள்.

அதன்படி, இந்த கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் மகளிர் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆர் வைஷாலி பங்கேற்று விளையாடி வருகிறார். இதில் ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் ஒன்பதாவது நேற்று நடைபெற்றது. இந்த சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான பல்கேரியாவின் அன்டோனெட்டா ஸ்டெபனோவாவை வைஷாலி வீழ்த்தினார்.

இதனால் அவர் 7 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார். இதையடுத்து முன்னாள் மகளிர் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜாங்கியை எதிர்கொண்டு அவரைத் தோற்கடித்தார். இந்த 10-வது சுற்றில் வெற்றி பெற்றதால் 7.5 புள்ளிகளை பெற்று முன்னிலை அடைந்த வைஷாலி, செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார்.

உக்ரேனியாவின் அன்னா முசிச்சுக் 8 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். மேலும், வைஷாலி ஃபிட் கிராண்ட் சுவிஸ் போட்டியின் பெண்கள் பிரிவில் வெற்றி பெற இன்னும் ஒரு ஆட்டம் உள்ளது. அதன்படி, இன்று நடைபெறும் 11-வது மற்றும் இறுதி சுற்றில் மங்கோலிய வீராங்கனை பட்குயாக் முங்குந்துளை எதிர்கொள்கிறார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.