துபாயில் இந்தியர் ஒருவர் மசாஜ் செய்வதற்காக சென்ற இடத்தில் நான்கு பெண்களால் கத்தி முனையில் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெண்டர் எனும் துபாய் டேட்டிங் அப்ளிகேஷனில் பெண்கள் மசாஜ் செய்வது போன்ற புகைப்படத்துடன் இந்திய ரூபாய்க்கு நான்காயிரம் மட்டுமே ஆஃபர் கொண்ட ஒரு மசாஜ் இருப்பதாக விளம்பரம் வந்துள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த இந்திய இளைஞர், மசாஜ் செண்டர் ஒருவர் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்து விளம்பரத்தில் வைத்த தொலைபேசி நம்பருக்கு அழைத்து விசாரித்து அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் தங்களது மசாஜ் சென்டர் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து அவரும் அங்கு செல்ல, அங்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த 4 பெண்கள் இருந்துள்ளனர்.
உள்ளே சென்ற அந்த இளைஞரை, கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, அவரை தொலைபேசியில் இருந்து தங்களது வங்கி கணக்குக்கு அவரிடம் இருந்த பணத்தை எல்லாம் அனுப்ப வைத்துள்ளனர். அதன்பின் அவரது கிரெடிட் கார்டை எடுத்து அதில் உள்ள பணத்தையும் எடுத்துள்ளனர். அவரது ஐ போனையும் எடுத்துவிட்டு இளைஞருக்கு சரமாரியாக அடி கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அவர் தனது வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக பணம் திருடப்பட்டுள்ளதாக வங்கிக்கு தெரிவித்துள்ளதுடன், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு பெண் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆசையாக மசாஜ் செய்வதற்காக சென்று 55 லட்சம் ரூபாயை இழந்த இந்திய இளைஞர் குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…