கொரோனா வைரஸின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் டிசம்பரில் தொடங்கிய வைரஸ் உலகம் முழுவதும் இப்பொழுது பரவியுள்ளது. இந்த வைரஸ் பற்றி ஒரு இந்திய சிறுவன் அபிக்யா ஆனந்த், கடந்த ஆகஸ்ட் மாதமே கணித்திருக்கிறார். அதாவது கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் 2019 ஆகஸ்ட் முதல், 2020 ஏப்ரல் வரை உலகை மிகப்பெரிய நோய் அச்சுறுத்தும் என்பதை கணித்து கூறியுள்ளார். அதுபோன்றுதான் சீனாவில் டிசம்பர் மாதம் கொரோனா கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த சிறுவன், மிகவும் அரிதாக செவ்வாய், குரு, சனி, ராகு, சந்திரன் ஆகியவை சூரிய குடும்பத்தின் வெளி வளையத்தில் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. இந்த மூன்று கிரகங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இவை இணைவதால் அதிகமான கதிர்வீச்சு பூமியை தாக்கும் என்றும் அதேநேரம் சந்திரனும், ராகுவும் இணைவதும் சக்தி வாய்ந்ததாகும் என தெரிவித்துள்ளார். ராகு, உலகில் நோய்களை பரப்பும் என ஆனந்த் கணித்து கூறியுள்ளார். அதேபோல் தற்போது உலகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்நோயின் தாக்குதல் எப்போது குறையும் என மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திரும்பவும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸின் வேகம் எப்போது குறையும் என்பதையும் அந்த சிறுவன் ஆனந்த் கணித்துள்ளார். ஏப்ரல் 1 வரை கொரோனா தாக்கம் அதிகம் இருக்கும் என்றும் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களிலும், பாதிப்பு அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்துக்கு பின் வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து மே 29ல் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும். இதையடுத்து பொருளாதார வீழ்ச்சியும், நவம்பரில் முடிவுக்கு வரும் என அந்த சிறுவன் தெரிவித்துள்ளார்.
HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…