பாராஒலிம்பிக்-பேட்மிட்டனில் இந்திய வீரர், வீராங்கனை வெற்றி..!

டோக்கியோ பாராஒலிம்பிக்கில் பேட்மிட்டனில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர், வீராங்கனை பாலக் கோலி  வெற்றிபெற்றனர்.

மலேசிய வீரர் டிதின் தரேசோவை இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் எதிர்கொண்டார். இப்போட்டியில் 22-20,21-10 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா நாகர்  வெற்றி பெற்றார். மற்றோரு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பாலக் கோலி துருக்கி வீராங்கனை ஜெஹ்ராவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் துருக்கி வீராங்கனை ஜெஹ்ராவை 21-12, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பாலக் கோலி வெற்றி பெற்றார்.

 

author avatar
murugan