அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய விமானப் படை தீவிர ரோந்துப் பணி

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய விமானப் படை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் இந்திய விமானப் படை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வான்வெளி அத்துமீறலைத் தடுக்க இந்திய விமானப்படை ரோந்துப் பணியில் ஈடுபட்டதாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.சீனாவின் அத்துமீறல்களைத் தடுக்க IAF அதன் போர் விமானங்களை சமீபத்திய வாரங்களில் 2-3 முறை ரோந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் 9 அன்று, அருணாச்சலின் தவாங்கில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே ஒரு வன்முறை மோதல் வெடித்தது, இதில் இரு தரப்பிலும் உள்ள வீரர்களுக்கு  “சிறிய காயங்கள் ஏற்பட்டது.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment