மத்திய அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்த இந்திய உசைன் போல்ட்.. இதுதான் காரணம்..!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டை போலவே, கர்நாடகாவில் எருமைகளுடன் ஓடும் கம்பாலா எனும் பாரம்பரிய விளையாட்டு நடைபெற்று வரும். அந்த போட்டியின்போது, சினிவாச கவுடா எனும் கட்டிட தொழிலாளி, 9.55 வினாடிகளில் 100 மீட்டர் தூரம் ஓடினார்.

Image result for ஒலிம்பிக் தர அளவு வேறு, பாரம்பரிய விளையாட்டுக்கான அளவு வேறு. அதிகாரப்பூர்வ பயிற்சி அல்லது சோதனைகள் நடத்திதான், சீனிவாச கவுடாவின் திறமையை உறுதி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ, நாடு முழுவதும் வைரலானது. மேலும், மத்திய விளையாட்டு துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு பார்வைக்கும் சென்றது. அதனை பார்த்த அமைச்சர், சினிவாச கவுடா போன்ற வீரர்களை ஓலிம்பிசுக்கு தயார் படுத்தினால் சிறப்பாக இருக்கும் என நினைத்தார்.

இந்நிலையில், அவரை பெங்களூரில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஆதோரிட்டி ஆப் இந்தியா பயிற்சி கூடத்திற்கு வருகைதந்து பயிற்சி எடுக்குமாறு அழைப்பு விடுத்தார். மேலும், அதற்கான ரயில் டிக்கெட்களையும் அவருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சீனிவாச கவுடா அங்கு வரவில்லை.

Image result for srinivasa gowda runner video

இதுகுறித்து அவரை தொடர்புகொண்டு கேட்கையில், “ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது வேறு, கம்பாலாவில் ஓடுவது வேறு. எனக்கு கம்பாலாவில் விளையாடுவது தான் பிடித்துள்ளது எனவும், அங்கு நடைபெறும் பயிற்சிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை” என கூறினார்.

மேலும், தான் மார்ச் 10ஆம் தேதி வரை கம்பாலா போட்டிகளில் பிஸியாக இருப்பேன். என கூறி மத்திய அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இதனை அறிந்த மத்திய அமைச்சர், இன்று அளித்த பேட்டியில், பாரம்பரிய தற அளவு வேறு, ஒலிம்பிக் தர அளவு வேறு என கூறினார். மேலும், அங்கீகாரபூர்வமான பயிற்சி அல்லது சோதனைகள் நடத்திதான் சினிவாச கவுடாவின் திறமை உறுதி செய்யப்படும் என கூறினார்,