வங்கதேசத்திற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.!

வங்கதேசத்திற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட்களில் விளையாடுகிறது. 2-வது ஒருநாள் போட்டியில் கேட்ச் பிடிக்கும்போது கைவிரலில் காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சிகிச்சைக்காக இந்தியா திரும்பியுள்ளார்.

மேலும் குல்தீப் சென் மற்றும் தீபக் சஹர் ஆகியோரும் போட்டியிலிருந்து விலகியுள்ளனர். இதனால் 3-வது ஒருநாள் போட்டிக்கான திருத்தப்பட்ட 14 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கே.எல்.ராகுல் அணிக்கு தலைமை வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி: கேஎல் ராகுல் (C/W), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் பட்டிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (W), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ்.

author avatar
Muthu Kumar

Leave a Comment