ஐ.பி.எல் வந்த பிறகு இந்தியா ஒரு டி-20 உலகக்கோப்பையும் வெல்லவில்லை- வாசிம் அக்ரம்

ஐ.பி.எல் அறிமுகமான பிறகு இந்தியா ஒரு டி-20 உலகக்கோப்பையும் வெல்ல வில்லை என வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற டி-20 உலககோப்பையின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி, வெற்றி பெற்று இந்திய அணியை தொடரிலிருந்து வெளியேற்றியது. இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியை பலரும் விமரிசித்து வருகின்றனர்.

மேலும் இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியின் மூத்த வீரர்கள் பலர் ஓய்வு குறித்து அறிவிக்கலாம் என்று கவாஸ்கர் கூறியிருந்தார், சோயப் அக்தர் கூறும் போது, இந்திய அணி ஐசிசி மாதிரியான பெரிய தொடர்களில் விளையாடும்போது, அவர்கள் சரியான கேப்டனை தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது இதனால் நிர்வாகம் தான் முழு பொறுப்பும் ஏற்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்டர் வாசிம் அக்ரம், கூறும்போது ஐ.பி.எல் அறிமுகமானத்திலிருந்து இந்திய அணியால் ஒரு டி-20 உலகக்கோப்பையும் வெல்ல முடியவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, ஐ.பி.எல் 2008இல் வந்த பிறகு இந்தியாவுக்கும் மற்ற உலக அணிகளுக்கும் வித்யாசம் இருக்கும் என்று எல்லாரும் நினைத்தார்கள், ஆனால் 2007இல் தொடங்கப்பட்ட டி-20 உலகக்கோப்பை வென்ற பிறகு இந்திய அணி டி-20 உலகக்கோப்பையை வெல்லவில்லை.

author avatar
Muthu Kumar

Leave a Comment