பங்களாதேஷ் ராணுவத்திற்கு 20 இராணுவ குதிரை, 10  நாய்களை பரிசளித்த இந்தியா .!

புதுடெல்லி மற்றும் டாக்கா இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில், இந்திய ராணுவம் நேற்று முழுமையாக பயிற்சி பெற்ற 20 இராணுவ குதிரைகளையும், 10  நாய்களையும் பங்களாதேஷ் ராணுவத்திற்கு பரிசளித்தது.

இந்த குதிரைகள் மற்றும் நாய்கள் இந்திய இராணுவத்தின் தொலைநிலை மற்றும் கால்நடை படையினரால் பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த சிறப்பு நாய்கள் மற்றும் குதிரைகளை பயிற்றுவிப்பதற்கும், கையாளுவதற்கும் பங்களாதேஷ் ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்துள்ளது.

“பொதுவாக இரு நாடுகளுக்கும் குறிப்பாக இரு படைகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக, இந்திய இராணுவம் முழுமையாக பயிற்சி பெற்ற 20 இராணுவ குதிரைகளையும் 10 நாய்களையும் பங்களாதேஷ் ராணுவத்திற்கு பரிசளித்தது” என்று இந்திய ராணுவ அறிக்கை கூறுகிறது.

author avatar
murugan