SAFF U-19 பெண்கள் சாம்பியன்ஷிப்: இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

SAFF U-19 பெண்கள் சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. வங்காளதேசத்தில் நடந்த போட்டியில் நேபாளத்தை 4 – 0 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணி வீராங்கனைகள் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்காத நிலையில் இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடினர்.

இதன் காரணமாக 4 கோல்களை விளாசி அசத்தினர். முக்கியமாக நேஹா மிகச்சிறப்பாக விளையாடினார். அவர் இரண்டு கோல்களையும், சுலஞ்சனா ரவுல் ஒரு கோலும், ரெம்ருஹட்புயி கோலின் ஒரு கோலும் அடித்தார்கள்.

இந்திய ஹாக்கி வீரர் வருண் குமார் மீது போக்சோ வழக்கு ..!

இந்தியா தனது முதல் போட்டியில் பூட்டான் அணியை வீழ்த்தியிருந்தது, அதற்கு அடுத்து விளையாடிய போட்டியில் வங்காளதேச அணியிடம் வீழ்ந்தது. பிப்ரவரி 8ஆம் தேதி (வியாழன்) அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

Leave a Comment