BREAKING:நடைமேடை கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.50 ஆக அதிகரிப்பு.!

நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கொரோனா எதிரொலியால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நடைமேடை கட்டணம் 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என தென்னக  ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு நாளை முதல் வருகின்ற 31-ம் தேதி வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலையில் 125 ஆக  இருந்த நிலையில் அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 3 ஆக உள்ளது.

 

 

 

author avatar
murugan