திருவாரூர் மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் ட்ரான் பறக்க தடை விதித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு.
சமீப காலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதல்வர்” என்ற புதிய திட்டத்தின் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு, அரசு திட்டங்களையும் பார்வையிட்டு வருகிறார். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில், வரும் பிப்.21, 22 ஆகிய தேதிகளில் திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் வருகையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ட்ரான் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவாரூர் செல்ல உள்ளதை முன்னிட்டு ட்ரான் பறக்க தடை விதித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.