இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,947 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது.

  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,947 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 39,583 ஆக பதிவாகியுள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் 5,096 பேர் குணமடைந்துள்ளனர்.
  • இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,629 பேர் ஆக உள்ளது. நேற்று ஒரேநாளில் 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
  • இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,19,095 ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 2,18,52,16,710 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 34,21,962 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
author avatar
Dinasuvadu Web

Leave a Comment