பீகாரில் 2 குழுக்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு.. 4 பேர் கொல்லப்பட்டனர்..

பீகார் மாநிலம் பிஹ்தாவில் 2 குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

பீகாரின் சோன் ஆற்றில் நேற்று (செப் 29) சட்டவிரோதமாக மணல் எடுப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு குழுக்கள் துப்பாக்கிச் சூடு நடந்ததில் 4 பேர்  கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் நடத்திய விசாரணையில், மோதலின் போது 4 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பெகுசராய் பகுதியில் உள்ள மல்ஹிபூர் சௌக் என்ற இடத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
Varathalakshmi

Leave a Comment