இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,615 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது.

  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,615 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 40,979 ஆக பதிவாகியுள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் 4,972 பேர் குணமடைந்துள்ளனர்.
  • இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,584 பேர் ஆக உள்ளது. நேற்று ஒரேநாளில் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
  • இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,09,525 ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை  2,17,96,31,500 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 13,87,533 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
author avatar
Muthu Kumar

Leave a Comment