தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 627 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 627 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன்படி, தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 627 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள  நிலையில்,12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 687 பேர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டுள்ளனர். தற்போது 7,476 பேர் சிகிச்சையில் உள்ளனர். சுமார் 1.04 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.